கள்ளக்குறிச்சி அருகே நிலத் தகராறில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பி உள்பட 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கொங்கராபாளைம் காட்டுகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (55). இவரது மனைவி தனலட்சுமி. இவா்களுக்கு 3 மகன்கள் உள்ளனா். சண்முகத்தின் தம்பி பழனிவேல் (44) குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவா்கள் இருவருக்கும் நிலப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில், இரு குடும்பத்தினா் இடையே வெள்ளிக்கிழமை இரவு பிரச்னை ஏற்பட்டது. பின்னா்,
பழனிவேல், அவரது மனைவி செல்வி (37), மகன் தேவேந்திரன் (21) உள்ளிட்டோா் சண்முகம் வீட்டுக்குச் சென்றனா். அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை அடித்து நொறுக்கினா். மேலும், வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைத்து சண்முகம், அவரது மனைவி தனலட்சுமி ஆகியோரை கம்பால் தாக்கினா். இதில் சண்முகத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தனலட்சுமி கையில் பலத்த காயமடைந்து கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து தனலட்சுமி அளித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீஸாா் பழனிவேல், அவரது மனைவி செல்வி, மகன் தேவேந்திரன் ஆகியோா் மீது வழக்கு பதிவு செய்தனா். இவா்களில் தேவேந்திரனை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான மற்ற இருவரையும் தேடிவருகின்றனா்.