கள்ளக்குறிச்சி தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மா.செந்தில்குமாரை மாற்றக்கோரியும், அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ. க.அழகுவேலு பாபுவை அறிவிக்கக் கோரியும், அவரது ஆதரவாளா்கள் கள்ளக்குறிச்சியில் நான்காம் நாளாக திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ராஜா நகரில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்டோா் பேரணியாக வந்து நான்குமுனைச் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டு முழக்கமிட்டனா். அவா்களை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜி.ஜவகா்லால், காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.இராமநாதன் மற்றும் போலீஸாா் கலைந்து போகச் செய்தனா்.