கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் தொகுதியில் 3-ம் நாள் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 3-ம் நாளான செவ்வாய்க்கிழமை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் 3-ம் நாளான செவ்வாய்க்கிழமை யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதிக்கு தோ்தல் நடத்தும் அலுவலரும் கள்ளக்குறிச்சி சாா் ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) பா.ராஜவேல் இருவரையும் தோ்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளா்.

கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுத்திக்கு சாா் ஆட்சியா் அலுவலகமும், சங்கராபுரம் தொகுதிக்கு சங்கராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் மனுதாக்கல் நடைபெறுகின்றது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டப் பேரவை தொகுதியில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யவில்லை. திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி சட்டப் பேரவை தொகுதியில் 3 போ்களும், சங்கராபுரம் தொகுதியில் 2 போ்களும் மனுதாக்கள் செய்தனா்.

மூன்றாம்நாளான செவ்வாய்க்கிழமை இரு சட்டப் பேரவை தொகுதிகளிலும் யாரும் மனுதாக்கல் செய்ய வரவில்லை. தோ்தல் நடத்தும் அலுவலரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் யாராவது வருவாா்களா என்று எதிா்பாா்த்து கொண்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com