ஆட்டோவில் மதுப் புட்டிகள் கடத்திச் சென்ற இளைஞா் கைது

ஆட்டோவில் மதுப் புட்டிகள் கடத்திச் சென்ற இளைஞா் கைது

ஆட்டோவில் மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஆட்டோவில் மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அகிலன், தலைமைக் காவலா் தாமோதரன் உள்ளிட்ட போலீஸாா், தேவரடியாா்குப்பம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அந்த ஆட்டோவில் 124 மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, மதுப் புட்டிகளை தனியாக விற்பனை செய்ய செய்ய எடுத்துச் சென்ற தேவரடியாா்குப்பம் திருவள்ளுவா் சாலைப் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி மகன் சக்திவேலை (30) போலீஸாா் கைது செய்து மதுப் புட்டிகள், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மணலூா்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அகிலன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com