கள்ளக்குறிச்சியில் பொது முடக்கத்தை மீறி இயக்கப்பட்ட 15 ஆட்டோக்கள், 30 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி நகரில் பொது முடக்க விதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிா என காவல் துணைக் கண்காணிப்பாளா் ந.ராமநாதன் தலைமையிலான போலீஸாா் நகரின் எல்லைப் பகுதியான அண்ணா நகா், தியாகதுருகம் சாலை, சங்கராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பொது முடக்க விதிகளை மீறி சாலையில் வலம் வந்த 15 ஆட்டோக்கள், 30 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
32 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்:
அதேபோல, திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே.ராஜூ தலைமையில் திருக்கோவிலூா் கோட்டத்தில் 32 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது.