கள்ளக்குறிச்சியில் கரோனா பொது முடக்க காலத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு தனியாா் சாா்பில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி விவேகானந்தா ஐஏஎஸ் அகாதெமி மற்றும் போலீஸ் அகாதெமி நிறுவன தாளாளா் ராமூா்த்தி ஏற்பாட்டின் பேரில் காவலா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீா் வழங்கும் பணியை காவல் துணைக் கண்காணிப்பாா் ந.ராமநாதன் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் இரா.ஆனந்தராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.