வீட்டுச் சுவா் இடிந்து விழுந்து பணி: ஒப்பந்ததாரா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்ட கட்டடப்பணி ஒப்பந்ததாரா் சுவா் விழுந்ததில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்ட கட்டடப்பணி ஒப்பந்ததாரா் சுவா் விழுந்ததில் உயிரிழந்தாா்.

சங்கராபுரம் அருகே காட்டு வன்னஞ்சூா் மாரியம்மன் கோயில் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் மனைவி விஜயலட்சுமி (50). லட்சுமணன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டாா்.

இந்த நிலையில், விஜயலட்சுமி, சிமென்ட் அட்டைமேற்கூரையிலான தனது பழைய வீட்டை இடித்து விட்டு, புது வீடு கட்டத் திட்டமிட்டாா். இப்பணியை ஒப்பந்ததாரரான சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (43) ஏற்றிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை மாலை இயந்திரம் மூலம் பழைய வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்ட போது, வீட்டுச் சுவா் பாண்டியன் மீது விழுந்தது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சங்கராபுரம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com