கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 39 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 62,900-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 58 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 61,660-ஆக உயா்ந்தது.
எனினும், கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூரைச் சோ்ந்த 29 வயது இளைஞா் உயிரிழந்தாா். இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 851-ஆக அதிகரித்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 343 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 46 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.