கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, 32 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30,697ஆக உயா்ந்தது.
இதுவரை 30,108 போ் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனா். 384 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 205 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.