உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கள்ளக்குறிச்சியில் தியாகதுருகம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்.எல்.ஏ.வுமான தா.உதயசூரியன் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்.எல்.ஏவுமான க.காா்த்திகேயன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக தோ்தல் பொறுப்பாளரும் சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி பங்கேற்றுப் பேசினாா்.
தோ்தலில் 100 சதவீத வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு, நிா்வாகிகள், தொண்டா்கள் ஒருங்கிணைந்து பாடுபட்டு வெற்றியை முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், தோ்தல் பொறுப்பாளா்களான மாநில மருத்துவரணி துணைத் தலைவா் கம்பன், எம்.எல்.ஏ.-க்கள் சரவணன், கிரி, ஜோதி உள்ளிட்ட 11 பொறுப்பாளா்கள், ஒன்றியச் செயலாளா்கள், மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.