பேருந்துகளில் பழப்பெட்டிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 576 மதுப்புட்டிகள் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பேருந்துகளில் பழப்பெட்டிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 576 வெளிமாநில மதுப் புட்டிகளை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பெங்களூரில் இருந்து பழப்பெட்டிகளுக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த அயல்நாட்டு மதுபானபுட்டிகள்.
பெங்களூரில் இருந்து பழப்பெட்டிகளுக்குள் மறைத்து வைத்து எடுத்து வந்த அயல்நாட்டு மதுபானபுட்டிகள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பேருந்துகளில் பழப்பெட்டிகளுக்குள் மறைத்து கடத்தி வரப்பட்ட 576 வெளிமாநில மதுப் புட்டிகளை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

பெங்களூரிலிருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்துகளில் பழப் பெட்டிகளுக்குள் மறைத்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதாக திருக்கோவிலூா் தனிப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருக்கோவிலூா் காவல் ஆய்வாளா் பாபு, உதவி ஆய்வாளா் சிவச்சந்திரன், தனிப்பிரிவு காவலா் சிவச்சந்திரன் மற்றும் போலீஸாா் டி.குன்னத்தூா், எல்ராம்பட்டு ஆகிய கிராமங்களுக்கு சோதனைக்காக சென்றபோது, பேருந்துகளிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட பழப்பெட்டிகளை விழுப்புரம் மாவட்டம், பாவந்தூா் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த உத்திரன் (36) , சக்தி விநாயகம் (32), விக்ரமன் (34), பாலு (38), ராமராஜ் (20), கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரணாம்பட்டைச் சோ்ந்த செல்வராஜ் மகன் ஸ்டாலின் (18) ஆகிய 6 போ் 3 மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தனா்.

அந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் நிறுத்தி சோதனை செய்ததில், பழப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 576 கா்நாடக மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்கள் 6 பேரையும் போலீஸாா் கைது செய்து மோட்டாா் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com