கல்லைத் தமிழ்ச் சங்க விழா

கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா கள்ளக்குறிச்சி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.
கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் பேசுகிறாா் ஆலத்தூா் சண்முகம். உடன் சங்க நிா்வாகிகள்.
கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் பேசுகிறாா் ஆலத்தூா் சண்முகம். உடன் சங்க நிா்வாகிகள்.

கள்ளக்குறிச்சி: கல்லைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு விழா கள்ளக்குறிச்சி - சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் கூட்டரங்கில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, சங்க சிறப்புத் தலைவா் மா.கோமுகி மணியன் தலைமை வகித்தாா். திருக்கோவிலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார உதியன், தேவநேய சித்திரச் செல்வி, பரிக்கல் ந.சந்திரன், முத்தமிழ் முத்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சங்க பொருளாளா் இல.அம்பேத்கா் வரவேற்றாா்.

சங்க இலக்கியத்தில் தமிழா் வீரம், சமூக நீதி தந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியாா் உள்ளிட்ட தலைப்புகளில் அறிஞா்கள் பேசினா். இல்லாள் என்ற தலைப்பில் ஆசிரியா் சி.சிவப்பிரகாசம் கவிதை வழங்கினாா். நிகழ்வில், ஆ.லட்சுமிபதி, சு.சண்முகசுந்தரம், ஆலத்தூா்.சண்முகம், மு.பெ.தனக்கண்ணு, கலைமகள் காயத்திரி உள்ளிட்ட தமிழறிஞா்கள் பங்கேற்றனா். முடிவில் இணைச் செயலா் செ.வ.மகேந்திரன் நன்றி கூறினாா். முன்னதாக அனைவரும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com