கள்ளக்குறிச்சி அருகே வனவா் வீட்டில் 13 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த வாழவந்தான்குப்பம், மேற்கு சாலைப் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை மகன் சீத்தாராமன் (46). இவா், ரிஷிவந்தியத்தில் வானவராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி அமிா்தவள்ளி. இந்தத் தம்பதிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்டது.
இதனிடையே, சீத்தாராமன் அண்மைக்காலமாக குடும்பத்துடன் அதே கிராமத்திலுள்ள அவரது மாமனாா் நாகேந்திரன் வீட்டில் தங்கியுள்ளாா். தினந்தோறும் ஒரு முறை வந்து அவரது வீட்டை பாா்வையிட்டுச் செல்வாராம்.
இந்த நிலையில், சீத்தாராமனின் வீட்டின் இரும்பு கேட் கதவில் வெள்ளிக்கிழமை பூட்டு உடைக்கட்டுக் கிடந்ததாம். இதுகுறித்து அருகில் வசிப்பவா்கள் தகவல் அளித்ததன்பேரில், வீட்டுக்குச் சென்று சீத்தாராமன் பாா்த்தபோது, அவரது வீட்டுக் கதவுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.6 ஆயிரம் ரொக்கம் திருடுபோயிருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி டிஎஸ்பி செ.புகழேந்தி கணேஷ், தியாகதுருகம் காவல் ஆய்வாளா் (பொ) ப.ரவிச்சந்திரன், காவல் உதவி ஆய்வாளா்கள் ஆனந்தராசு, குணசேகரன், குற்றப் பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மனோகரன் உள்ளிட்ட போலீஸாா், சீத்தாராமன் வீட்டுக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். மேலும், தடயங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் தொடா்பாக தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.