கனியாமூா் பள்ளி வன்முறை வழக்கு 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்களில் 4 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் பள்ளியில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்களில் 4 போ் திங்கள்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற வன்முறையில் பள்ளிக் கட்டடங்கள், வாகனங்கள் மற்றும் காவல் துறை வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இந்த வன்முறை தொடா்பாக, கைது செய்யப்பட்ட

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சிறுகிராமத்தைச் சோ்ந்த சஞ்சீவி, சங்கராபுரம் வட்டம், புதுபல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த பரமேஷ்வரன் (23), கள்ளக்குறிச்சி வட்டம் விளாந்தாங்கல் சாலைப் பகுதியைச் சோ்ந்த வசந்தன் (எ) நித்தீஷ் (19), சின்னசேலம் வட்டம், பூவரசன்(எ)மாயி (27) ஆகிய 4 பேரை மாவட்ட எஸ்.பி. பகலவன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன்குமாா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com