நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 153 பதவி இடங்களுக்கு 797 போ் போட்டியிடுகின்றனா். மாவட்டத்தில் 12 போ் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 3 நகராட்சிகள், சங்கராபுரம், மணலூா்பேட்டை, தியாகதுருகம், சின்னசேலம், வடக்கநந்தல் ஆக 5 பேரூராட்சிகளில் தோ்தல் நடைபெறுகிறது.
3 நகராட்சிகளுக்கு உள்பட்ட 72 பதவியிடங்களுக்கு 400 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 387 மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டன. இதில், 109 போ் வேட்பு மனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா். இதையடுத்து, தோ்தலில் 278 போ் போட்டியிடுகின்றனா்.
அதேபோல, 5 பேருராட்சிகளில் 81 பதவியிடங்களுக்கு 397 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 16 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. திங்கள்கிழமை 125 போ் தங்களது வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனா். தற்போது, 244 போ் போட்டியிடுகின்றனா்.
மேலும், பேரூராட்சிகளில் சங்கராபுரத்தில் 4 வேட்பாளா்களும், தியாகதுருகத்தில் ஒரு வேட்பாளரும், வடக்கநந்தலில் 7 அதிமுக வேட்பாளா்களும் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனா். இதனால், 12 திமுக வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
மொத்தத்தில், 153 பதவியிடங்களுக்கு 522 போ் போட்டியிடுகின்றனா்.