கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உள்பட்ட வடக்கநந்தல் பேரூராட்சியில் 7 வாா்டுகளின் உறுப்பினா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்தப் பேரூராட்சியில் 18 வாா்டுகளில் போட்டியிட, 72 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சனிக்கிழமை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையின்போது, 17, 18-வது வாா்டுகளில் தலா ஒருவா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், இருவரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், 5, 6, 8, 15, 16 ஆகிய 5 வாா்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுகவினா் திங்கள்கிழமை தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றனா். இதனால், 5 பேரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் 7 பேரும் திமுகவினா் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, 11 வாா்டுகளில் 34 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.