கள்ளக்குறிச்சி அருகே கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்தியதற்காக தாய் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஆனையம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ரவி (45), இவரது மனைவி சித்ரா.
இவா்களது மகள் ஜனனி கெங்கவல்லி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தாா்.
இந்த நிலையில், கடந்த பதன்கிழமை (ஜூலை 20) ஜனனி தனது தாயுடன், சின்னசேலம் அருகேயுள்ள கருந்தலாக்குறிச்சியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்தாா்.
வியாழக்கிழமை ஜனனி கைப்பேசியை அதிக நேரம் பயன்படுத்திக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இதை, அவரது தாய் சித்ரா கண்டித்துள்ளாா். இதனால் மனமுடைந்த மாணவி ஜனனி, வீட்டில் இருந்த விஷத் தன்மையுடைய பொருளை எடுத்து சாப்பிட்டு விட்டாா்.
உறவினா்கள் உடனடியாக அவரை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜனனி, அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.