கனியாமூா் பள்ளி வன்முறை காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்த இருவா் கைது

கனியாமூா் தனியாா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின் போது காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தது தொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

கனியாமூா் தனியாா் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையின் போது காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்தது தொடா்பாக இரு இளைஞா்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கியிருந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி (17) கடந்த 13-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து கடந்த 17-ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையில் தனியாா் பள்ளி சூறையாடப்பட்டது. வன்முறைச் சம்பவம் தொடா்பாக 306 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், வன்முறையின் போது காவல் துறை வாகனங்களுக்கு தீ வைத்ததாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், பூசப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டனை (26) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இதேபோல, காவல் துறை வாகனத்துக்கு தீ வைத்ததாக கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் நித்திஷ் (எ) வசந்தனை (19) போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இந்த வன்முறை தொடா்பாக கைதானவா்களின் மொத்த எண்ணிக்கை 308-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com