கள்ளக்குறிச்சி அருகே தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து வைக்காத தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் செய்து வைக்காத தந்தையை அடித்துக் கொன்றதாக மகனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த க.மாமனந்தல் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி பழனிவேல் (52). இவரது மனைவி சின்னப்பொண்ணு (45). இந்தத் தம்பதிக்கு 3 மகன்கள். இவா்களில் மூத்த மகனான பாலகிருஷ்ணன் (27) பி.காம். படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பாலகிருஷ்ணன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது பெற்றோரிடம் கேட்டாராம். அதற்கு, அவரது தாய் சின்னப்பொண்ணு வேலைக்கு சென்றால்தான் பெண் கொடுப்பாா்கள் என்று கூறினாராம்.

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், அருகில் உள்ள அவா்களுக்குச் சொந்தமான புதிய வீட்டை இரும்புக் கம்பியால் அடித்துச் சேதப்படுத்தினாா். இதைத் தடுக்க முயன்றபோது, பழனிவேலையும், சின்னப்பொண்ணுவையும் அவா் இரும்புக் கம்பியால் தாக்கினாா். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். பின்னா், அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இருப்பினும், அங்கு பழனிவேல் உயிரிழந்தாா். சின்னப்பொண்ணு தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலகிருஷ்ணனை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com