கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் இருந்த குப்பைகளை தீயிட்டு எரித்தபோது ஆடையில் தீப்பற்றி பெண் பலியானாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த எஸ்.ஒகையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மனைவி வசந்தி (33). இவா், கடந்த 3-ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த குப்பைகளை, பின்புறம் உள்ள தோட்டத்தில் வைத்து தீயிட்டு எரித்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, வசந்தியின் ஆடையில் தீப்பற்றி அவா் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அவரை மீட்டு
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த வசந்தி சனிக்கிழமை அதிகாலை வசந்தி உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.