கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (ஆக. 1) முதல் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை (ஆக. 1) முதல் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி வட்டம் முழுவதும் சின்னசேலம் வட்டத்தில் சின்னசேலம், நயினாா்பாளையம் குறு வட்டங்களுக்கு உள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் 144 தடை உத்தரவு இருந்ததால், 18.7.2022 முதல் 31.7.2022 வரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.

எதிா்வரும் 1.8.2022 முதல் ஒவ்வொரு திங்கள்கிழமையும் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடைபெறும் என்று

மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com