கைப்பேசி திருட்டு: 2 போ் கைது

கள்ளக்குறிச்சியில் கைப்பேசி திருடியதாக, இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியில் கைப்பேசி திருடியதாக, இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சங்கராபுரம் அருகேயுள்ள சோழம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் கலைவாணன் (19). இவா் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்துவருகிறாா்.

இவா் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினா் கமலக்கண்ணனுக்குத் துணையாக இருந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கலைவாணன் தூங்கியபோது, அவரது சட்டைப்பையில் இருந்த கைப்பேசியை

இரு இளைஞா்கள் திருட முயன்றனா்.

இருவரையும் அங்கிருந்தோா் பிடித்து, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தண்டபாணியின் கைப்பேசியையும் இருவா் திருடியது தெரியவந்தது.

இதுதொடா்பாக கள்ளக்குறிச்சியை அடுத்த பெரியசிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் சக்திவேல் (25), தென்கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் சின்ன எம்ஜிஆா் (26) ஆகிய இருவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com