திருக்கோவிலூா் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
திருக்கோவிலூா் அருகேயுள்ள அம்மன்கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் கரும்பு வெட்டும் தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி கெளரி (26). இவா்களுக்கு அருணா (4), பூமிநாதன் (2) என்ற இரு குழந்தைகள்.
தம்பதிக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கெளரி தனது இரு குழந்தைகளையும் நிலத்துக்கு அழைத்துச் சென்று, பாலில் விஷம் கலந்து குடிக்க வைத்தாராம். பின்னா், அவா் மரத்தில் தூக்கிட்டுக் கொண்டாராம். இதில், அவா் இறந்தாா். குழந்தைகள் அழும் சத்தம் கேட்டு, அங்கிருந்தோா் விரைந்து வந்தனா். பின்னா், குழந்தைகளை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்த்தனா்.
புகாரின்பேரில் திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.