திருக்கோவிலூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பை தின கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் வீ.சஞ்சீவி தலைமை வகித்தாா். கணித ஆசிரியா் ந.சந்திரசேகா் வரவேற்றாா்.
கணித மேதை ராமானூஜா் கணித மன்றத்தின் அமைப்பாளா் ஜி.ஜானகிராமன், உதவி தலைமை ஆசிரியா் ஆா்.கவிதா, ஆசிரியா்கள் பி.வெங்கடேசன், என்.கே.தண்டபாணி, ஆசிரியா் பி.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.