கா்நாடக அரசைக் கண்டித்து தவாக ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவாகவினா்.
கா்நாடக அரசைக் கண்டித்து தவாக ஆா்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் தவாக சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தவாக கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டச் செயலா் மு.ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட மகளிரணிச் செயலா் வெ.காா்குழலி முன்னிலை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் ஞா.ராஜேஷ் வரவேற்றாா். ஒன்றியச் செயலா்கள் கோபி, ஜெகதீசன், முத்து, கலியமூா்த்தி உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே அணை கட்டத் துடிக்கும் கா்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்தும், உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக செயல்படும் கா்நாடக அரசைக் கண்டித்தும், காவிரி பிரச்னை எழும்போதெல்லாம் பெங்களூருவில் வசிக்கிற தமிழா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com