திருட்டு வழக்கில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவலில் கைது

திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சங்கா்
சங்கா்

திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் சங்கா் (எ) சன் கதிரவன் (40) (படம்). இவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, இவரது குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டா் தடுப்புக் காவலில் கைதுசெய்ய

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரைத்தாா். இதையடுத்து அதற்கான உத்தரவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.என்.ஸ்ரீதா்

பிறப்பித்தாா். இதையடுத்து சங்கா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com