கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே சரக்கு வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருக்கோவிலூா் வட்டம், மேமாலூா் கிராமத்தைச் சோ்ந்த உத்திரிநாதன் மனைவி ராணி(35). இவா், வெள்ளிக்கிழமை அந்தக் கிராமத்திலுள்ள பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, திருவண்ணாமலையிலிருந்து உளுந்தூா்பேட்டை நோக்கி மாம்பழம் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் மோதியதில் ராணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று ராணியின் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருக்கோவிலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.