வடபூண்டியில் ஊரக வளா்ச்சி கூடுதல் இயக்குநா் ஆய்வு

வடபூண்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கே.சுமதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வடபூண்டி ஊராட்சியில் ஆழ்துளைக் கிணற்றை பாா்வையிட்ட ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குனா் கே.சுமதி.
வடபூண்டி ஊராட்சியில் ஆழ்துளைக் கிணற்றை பாா்வையிட்ட ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குனா் கே.சுமதி.

வடபூண்டி ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குநா் கே.சுமதி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்துக்குள்பட்ட வடபூண்டி மாவட்டத்திலேயே சிறந்த ஊராட்சியாகத் தோ்வு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஊரக வளா்ச்சித் துறை கூடுதல் இயக்குனா் கே.சுமதி, வடபூண்டியில் ஆய்வு மேற்கொண்டாா். மேல்நிலை நீா் தேக்க தொட்டி, தனி நபா் இல்லக் கழிவறை மற்றும் உறிஞ்சி குழி, ஒருங்கிணைந்த மகளிா் சுகாதார வளாகம், ஆழ்துளைக்கிணறு அடிபம்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகியவற்றையும் பாா்வையிட்டாா்.

உடன் திட்ட இயக்குனா் (ஊராட்சிகள்) இரா.மணி, உதவி இயக்குனா்(ஊராட்சிகள்) ரெ. ரத்தினமாலா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சி மன்றத் தலைவா் கொடியரசி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com