கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் சாலை பாதுகாப்பு வார விழா 2023- ன் கீழ் ஜனவரி 11 முதல் 17-ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டி, வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் அச்சிட்ட துண்டு பிரசுரங்களை வழங்கினா்.
கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில், போக்குவரத்து காவல்துைறை, ரோட்டரி சங்கம் இணைந்து இதனை நடத்தின.
நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன் தலைமை தாங்கினாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் இரா.செல்வம் முன்னிலை வகித்தாா். இதில் பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள், அடங்கிய ஸ்டிக்கா்கள் ஆட்டோ மற்றும் வாகனங்களில் ஒட்டப்பட்டன. அப்போது போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் தா்மராஜ் மற்றும் போலீஸாா், ரோட்டரி சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனா்.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் வாகனங்களுக்கு சாலை விழிப்புணா்வு ஸ்டிக்கா் ஒட்டிய வட்டார போக்குவரத்து அலுவலா் பா.ஜெயபாஸ்கரன்.