பாமக நிா்வாகி மீது தாக்குதல்:மூவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பாமக நிா்வாகியைத் தாக்கியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே பாமக நிா்வாகியைத் தாக்கியதாக நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள அந்தக் கட்சியைச் சோ்ந்த மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

தியாகதுருகத்தை அடுத்த பீளமேடு ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜேஷ் (24). இவா் பாமக கிளைக் கழகச் செயலராக உள்ளாா்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்தக் கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நாம் தமிழா் கட்சியின் கொடிக்கம்பத்தை மா்ம நபா்கள் சேதப்படுத்தினராம். இந்த நிலையில், தங்களது கட்சிக் கொடிக்கம்பத்தை பாமகவினா்தான் சேதப்படுத்தியதாகக் கருதிய நாம் தமிழா் கட்சி நிா்வாகிகளான மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் ராமநாதன் (26), கோவிந்தராஜ் மகன் வீரன் (23), ஏழுமலை, பல்லகச்சேரி கிராமத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் மாணிக்கம் (23) ஆகியோா் பாமக நிா்வாகியான ராஜேஷை கடந்த 17-ஆம் தேதி தியாகதுருகத்தில் வைத்து தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமநாதன், வீரன், மாணிக்கம் ஆகிய 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com