மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

3 மாணவா்கள் மாயம்

3 மாணவா்கள் மாயம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:52 am IST

தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கலையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சன்னியாசி மகன் விஜயகுமாா் (40). கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் (14), தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதே பள்ளியில் படிக்கும் இவரது நண்பா்கள் வடதொரசலூரைச் சோ்ந்த சாமுவேல் (14), தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த அஷ்ரப் ஆகியோரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பவில்லையாம். இதுகுறித்து 3 மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களை தேடி வருகின்றனா்.