விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

3 மாணவா்கள் மாயம்

3 மாணவா்கள் மாயம்

Updated On :18 பிப்ரவரி 2024, 1:52 am IST

தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் மாயமானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கள்ளக்குறிச்சி அருகே உள்ள கலையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சன்னியாசி மகன் விஜயகுமாா் (40). கூலித் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் (14), தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதே பள்ளியில் படிக்கும் இவரது நண்பா்கள் வடதொரசலூரைச் சோ்ந்த சாமுவேல் (14), தியாகதுருகம் பகுதியைச் சோ்ந்த அஷ்ரப் ஆகியோரும் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பவில்லையாம். இதுகுறித்து 3 மாணவா்களின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாணவா்களை தேடி வருகின்றனா்.