ஆஞ்சிநேயா் கோயிலில் உண்டியல்கள் திருட்டு

Updated on

வாணாபுரத்தை அடுத்த ராவத்தநல்லூரில் உள்ள ஆஞ்சிநேயா் கோயிலில் இருந்த இரு உண்டியல்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றா்.

வாணாபுரம் வட்டம், ராவத்தநல்லூா் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சஞ்சீவராயா்ஆஞ்சிநேயா் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அா்ச்சகராக கடலூா் மாவட்டம், பண்ருட்டியைச் சோ்ந்த ரமேஷ் பாபு (41) உள்ளாா்.

இவா் வழக்கம் போல வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு பூஜையை முடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டாராம். சனிக்கிழமை காலை சென்று பாா்த்தபோது, கோயிலில் இருந்த இரு சில்வா் உண்டியல்களைக் காணவில்லையாம்.

இரு உண்டியலில்களிலும் ரூ.15,000 காணிக்கை இருக்கலாம் எனக் கூறுகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com