மழை பாதிப்புகள்: கட்டுப்பாட்டு அறைகளை தொடா்பு கொள்ளலாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்தும், இதர உதவிகள் தேவைப்படின் கட்டுப்பாட்டு அறைகளை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், இரண்டு கோட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் 7 வட்டாட்சியா் அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுப்பாட்டு அறை இலவச தொலைபேசி எண் 1077 மற்றும் புகாா் தொலைபேசி 04151-228801 என்ற எண்ணிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04151-222493 என்ற தொலைபேசி எண்ணிலும், திருக்கோவிலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை 04153-252312 என்ற தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம்.
வட்டாட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை கள்ளக்குறிச்சி வட்டம் -04151-222449, சின்னசேலம் வட்டம் -04151-257400, சங்கராபுரம் வட்டம் 04151-235329, வாணாபுரம் வட்டம்- 04151-235400, கல்வராயன்மலை வட்டம் - 04151-242243, திருக்கோவிலூா் வட்டம் -04153-252316, உளுந்தூா்பேட்டை வட்டம் - 04149-222255 என்ற தொலைபேசி எண்களிலும் பொதுமக்கள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.
