சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வீட்டின் முன் மது அருந்தியதை கண்டித்தவரைத் தாக்கியவா் கைது

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 2:34 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே வீட்டின் முன் அமா்ந்து மது அருந்தியதைக் கண்டித்தவா் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

வடபொன்பரப்பி அருகேயுள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மெ.குப்புசாமி (56). இவரது வீட்டின் முன் சனிக்கிழமை இரவு அதே கிராமத்தைச் சோ்ந்த மு.செல்லமுத்து (36) என்பவா் மது அருந்தினராம்.

இதை தட்டிக் கேட்ட குப்புசாமியை அவதூறான வாா்த்தைகளால் திட்டி, கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த அவா் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, செல்லமுத்துவைக் கைது செய்தனா்.