தேசிய பிற்பட்டோர் ஆணையம் 15-ம் தேதி பொது விசாரணை

 புதுச்சேரி, ஜூன் 2: புதுச்சேரியில் ஒரு சில ஜாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரியுள்ளனர்.  இதையொட்டி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இம் மாதம் 15-ம் தேதி அந்த

 புதுச்சேரி, ஜூன் 2: புதுச்சேரியில் ஒரு சில ஜாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரியுள்ளனர்.

 இதையொட்டி தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இம் மாதம் 15-ம் தேதி அந்தச் சாதி அமைப்பினரிடம் பொது விசாரணை நடத்த உள்ளது.

 கணக்குப் பிள்ளை, மருத நாயுடு, பாளையப்பட்டு நாயுடு, வாண்டையார், வெள்ளாள செட்டியார், கொள்ளாளு, பரியாரி, குடும்பை, ஏழுதட்சான், எடிகா, செட்டியார், பட்டிநாவ செட்டியார், வடபாலிஜா.

 இந்தச் சாதியினர், அமைப்புகள் தங்களிடம் உள்ள தகவல்களை தேசிய ஆணையத்திடம் அளிக்கலாம்.

 புதுச்சேரியில் விசாரணை நடைபெறும் இடத்தை புதுச்சேரி அரசு பின்னர் அறிவிக்கும் என்று தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com