புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடுகிறது.
புதுச்சேரியில் வரும் மே 16-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது 4 மாதங்களுக்கான செலவினத்துக்கு ஒப்புதல் பெறும் வகையில் சட்டப்பேரவை வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு கூடுகிறது. சட்டப்பேரவைத் தலைவர் வி.சபாபதி தலைமை வகிக்கிறார்.
ஏற்கெனவே தேர்தல் நடைபெறும் இதர மாநிலங்களான தமிழகம், கேரளம், அசாம், மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை கூட்டப்பட்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை கூடுகிறது.
இக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளோ, திட்டங்களோ எதுவும் அறிவிக்க இயலாது.
மேலும் இக்கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடராக இருக்கும்.