பிஆர்டிசி ஊழல் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு என்ன ஆனது என சட்டப்பேரவை அதிமுக தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் புதன்கிழமை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது:
மாநிலத்தின் உயர் பதவி வகிக்கும் ஆளுநர், முதல்வரின் பேச்சும், செயல்பாடும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது.
சங்கரராமன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை சென்னை உயர்நீதிமன்றம் ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். பத்திர பதிவுத் துறை செயல்பாட்டை அரசு கண்காணிக்க வேண்டும்.
குற்றங்களை தடுப்பதில் காவல்துறையின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. கடந்த ஓர் ஆண்டில் 34 கொலைகள் நடந்துள்ளது. புதுச்சேரியில் மக்களை அமைச்சர்கள் சந்தித்து குறைகளை கேட்க வேண்டும். அவர்கள் மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
அமைச்சர் கந்தசாமி: வாரம் ஒரு தொகுதிக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு தீர்வு காணப்படும்.
அன்பழகன்: போக்குவரத்து நெரிசலில் புதுச்சேரி சிக்கி தவிக்கிறது. சாலையோரங்களில் ஆட்டோ நிறுத்தங்கள் அதிகளவில் தொடங்கப்படுகின்றன. ஆர்டிஓ அலுவலகங்களில் தரகர்கள் லஞ்சம் வாங்குவது அதிகரித்துள்ளது.
பிஆர்டிசி கழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு என்ன ஆனது? என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.