அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் வெளிநடப்பு

பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது குறித்த ஒத்திவைப்பு பிரேரணை ஏற்கப்படாததால்,
Updated on
1 min read

பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது குறித்த ஒத்திவைப்பு பிரேரணை ஏற்கப்படாததால், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இருந்து அதிமுக, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
 கடந்த ஆட்சியின் இறுதியில் பொதுப்பணித் துறை உள்பட பல்வேறு துறைகளில் 1400 பேர் பணியமர்த்தப்பட்டனர்.
 தேர்தல் நேரத்தில் இந்த நியமனம் நடந்ததாகக் கூறி தேர்தல் ஆணையம் உத்தரவின் பேரில் இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
 இவர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து அவையில் பேசுவதற்கு ஒத்திவைப்பு பிரேரணையை அதிமுக உறுப்பினர் அன்பழகன் கொடுத்தார். இது தொடர்பாக ஏற்கெனவே அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு விட்டதாகக் கூறி அதை பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் ஏற்கவில்லை.
 இதனால் அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com