புதுவை ஸ்ரீமணக்குள விநாயகர் கல்வி நிறுவன நிறுவனரும், முன்னாள் அரசு தலைமைக் கொறடாவுமான கேசவனின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அவரது உருவப் படத்துக்கு புதுவை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி இயக்குநர் ராஜகோவிந்தன், உதவி இயக்குநர் காக்னே, டீன் அமரநாதன், அகாதெமி டீன் கார்த்திகேயன், ஆராய்ச்சித் துறை டீன் அமோல் டாங்கரே, மருத்துவமனை கண்காணிப்பாளர் வெற்றிக்கொடி, துணைக் கண்காணிப்பாளர் கிரிஜா, பிரகாஷ், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி இயக்குநர் வெங்கடாஜலபதி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதல்வர் மலர்கண், மயிலம் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் காஞ்சனா, செவிலியர் கல்லூரி முதல்வர் தனுசு, வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ் அன்புசெல்வன், நளினி ராஜகோவிந்தன் மற்றும் பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.