நாளை ஜிப்மரில் ஆசிய மாநாடு
By புதுச்சேரி, | Published on : 26th October 2017 08:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
மருத்துவ பதிவேட்டின் கல்வி மற்றும் செயல்பாடுகளின் பொன்விழாஆண்டை முன்னிட்டு, ஜிப்மர் மற்றும் இந்திய சுகாதார தகவல் மேலாண்மை சங்கம் சார்பில் வரும் 27 மற்றும் 28 தேதிகளில் ஆசிய அளவிலான மாநாடு நடைபெறுகிறது.
ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா மாநாட்டை தொடக்கி வைக்கிறார்.
மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக "ஒரு நோயாளி, ஒரு எண், ஒரு பதிவேடு-பிறப்பு முதல் இறப்பு வரை' என்ற தலைப்பில் பல்வேறு அம்சங்களை விவாதிக்கப்படுகின்றன.
முக்கியமாக கணிணி மயமாக்குதலின் நன்மைகள், உலக அளவிலான மின்ணணு மருத்துவ பதிவேடு பற்றிய கண்டுபிடிப்புகள், செயல்பாட்டு உக்திகள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள், நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் உள்ளிட்டவை விவாதிக்கப்பட உள்ளன.