ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை 

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Updated On :18 ஏப்ரல் 2018, 8:44 am IST

அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி நகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இது குறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 புதுச்சேரி நகராட்சி எல்லைக்கு உள்பட்ட இடங்களில் விளம்பரம் செய்பவர்கள், அரசு அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விளம்பரப் பதாகைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
 ஆனால், விளம்பரதாரர்கள் அந்த இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் விளம்பரப் பதாகைகளை வைத்தும், சுவரொட்டிகளை ஒட்டியும் வருகின்றனர்.இதனால் பொதுமக்கள் மற்றும் பாதசாரிகள் விபத்துகளில் சிக்குகின்றனர்.
 இதுபோன்ற அனுமதியற்ற பதாகைகள் அன்றாட நிகழ்வுகளுக்கு இடையூறாக இருப்பதோடு, பொலிவுறு நகரமாகவும் புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டதால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சலுகைகளைப் பெறத் தடையாகவும் உள்ளது.
 எனவே, அரசு அனுமதித்துள்ள இடங்களில் மட்டும் விளம்பரதாரர்கள் முறையாக கட்டணம் செலுத்தி, அரசு ஆணை பெற்று விளம்பரங்கள் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 தவறும்பட்சத்தில், அந்த விளம்பரப் பதாகைகள் அகற்றப்படும். சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.