கஞ்சா பயன்படுத்திய 9 பேர் கைது

திருநள்ளாறில் தங்கும் விடுதியொன்றில் பொறியியல் பட்டதாரியான ஷியாம் சுந்தர் தனது பிறந்த நாளுக்காக நண்பர்களுக்கு வியாழக்கிழமை இரவு விருந்து கொடுத்தாராம்.

திருநள்ளாறில் தங்கும் விடுதியொன்றில் பொறியியல் பட்டதாரியான ஷியாம் சுந்தர் தனது பிறந்த நாளுக்காக நண்பர்களுக்கு வியாழக்கிழமை இரவு விருந்து கொடுத்தாராம். விருந்தில் அவரது நண்பர்கள் விக்ரமன், கிஷோர், குல்முகம்மது, வினோத்ராஜ், வீரமணி, ஸ்ரீபன்ராஜ், விஜய், தினேஷ் ஆகிய 8 பேரும் கலந்துகொண்டனர். இவர்கள், போதைப் பொருளான கஞ்சா வைத்திருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார், சுரேஷ் ஆகியோர் விடுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, மேற்கண்ட 9 பேரும் கஞ்சாவை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com