திருநள்ளாறில் தங்கும் விடுதியொன்றில் பொறியியல் பட்டதாரியான ஷியாம் சுந்தர் தனது பிறந்த நாளுக்காக நண்பர்களுக்கு வியாழக்கிழமை இரவு விருந்து கொடுத்தாராம். விருந்தில் அவரது நண்பர்கள் விக்ரமன், கிஷோர், குல்முகம்மது, வினோத்ராஜ், வீரமணி, ஸ்ரீபன்ராஜ், விஜய், தினேஷ் ஆகிய 8 பேரும் கலந்துகொண்டனர். இவர்கள், போதைப் பொருளான கஞ்சா வைத்திருப்பதாக திருநள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் பிரவீன்குமார், சுரேஷ் ஆகியோர் விடுதிக்குச் சென்று சோதனையிட்டபோது, மேற்கண்ட 9 பேரும் கஞ்சாவை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.