காற்று அழுத்தியை (ஏர் கம்ப்ரஸர்) பயன்படுத்தியதால் இளைஞரின் வயிறு பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் தொழில்பேட்டையில் தனியார் அரசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு பிகார், ஒடிஸா உள்ளிட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிகாரை சேர்ந்த மிதுபஸ்வான் (32), அவரது உறவினரான ரமயன் பஸ்வான் இருவரும் வியாழக்கிழமை வேலையை முடித்துவிட்டு, காற்று அழுத்தி மூலம் உடலை மாறி மாறி சுத்தம்
செய்து கொண்டிருந்தனர்.
அப்போது காற்றி அழுத்தியை வைத்து அவர்கள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மிது பஸ்வான் வாய் வழியாக காற்று உள்ளே புகுந்து வயிறு உப்பியதாகக் கூறப்படுகிறது. மயக்கமடைந்த அவரை அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்டு, ஜிப்மரில் சேர்த்தனர்.