மாடித் தோட்டம் அமைக்கப் பயிற்சி

புதுவை அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ். அலுவலர்களுக்கான மாடித் தோட்டம் அமைக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


புதுவை அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ். அலுவலர்களுக்கான மாடித் தோட்டம் அமைக்கும் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுவை அரசு கல்வித் துறை சார்பில், உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர்களுக்கான மாடித் தோட்டம் அமைக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முகாமை மாநில அலுவலர் குழந்தைசாமி தொடக்கிவைத்தார். வேளாண் துறை இணை இயக்குநர் சிவபெருமான், வேளாண் அலுவலர் சிவக்குமார் ஆகியோர் செயல் விளக்கத்துடன் கூடிய பயிற்சியை அளித்தனர்.
லாசுப்பேட்டையில் உள்ள தோட்டக்கலைப் பண்ணையில் நேரடிச் செயல் விளக்கம் தரப்பட்டது. மானிய விலையில் தோட்டக்கலை பொருள்களை வாங்குவது, பூச்சித் தடுப்பு ஆகியவை பற்றியும் விளக்கப்பட்டன.
நிகழச்சிக்கான ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். மண்டல ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com