மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி

நீட் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி புஸ்தக் மந்திரில் நடைபெற்று வருகிறது.

நீட் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி புஸ்தக் மந்திரில் நடைபெற்று வருகிறது.
 பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எழுதுவதற்கு வசதியாக மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதி - அரவிந்தர் சந்திப்பில் உள்ள புஸ்தக் மந்திர் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சி வருகிற 22- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 கதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் குமரன் புத்தகக் கண்காட்சியை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். வாசகர் வட்டச் செயலர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
 நிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், துணைத் தலைவர் சிவராஜ், பொருளாளர் ஜெகதீசன், வழக்குரைஞர் பரிமளம், கோபாலகிருஷ்ணன், முருகையன், ஐயனாரப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
 நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சியில் மருத்துவக் கல்லூரிப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிப் புத்தகங்கள், முந்தைய ஆண்டுகளின் வினா - விடை புத்தகங்கள், பி.ஆர்க். ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com