பாரதிதாசன் நினைவு நாள் கடைப்பிடிப்பு

பாவேந்தர் பாரதிதாசனின் 56-ஆவது நினைவு நாள் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பாவேந்தர் பாரதிதாசனின் 56-ஆவது நினைவு நாள் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் பலரும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கவிஞர் கோ. பாரதி தலைமையில் வைத்திக்குப்பத்தில் உள்ள  பாரதிதாசனின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசன் சிலைக்கும், பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இதில் செல்வதுரை நீஸ், ரமேஷ் பைரவி, கு. சத்தியமூர்த்தி, குணசேகரன், மஞ்சமாதா, கீர்த்திகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குரு. முனுசாமி தலைமையில் இசையஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com