பாவேந்தர் பாரதிதாசனின் 56-ஆவது நினைவு நாள் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் பலரும் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான கவிஞர் கோ. பாரதி தலைமையில் வைத்திக்குப்பத்தில் உள்ள பாரதிதாசனின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பாரதி பூங்காவில் உள்ள பாரதிதாசன் சிலைக்கும், பெருமாள் கோவில் தெருவில் உள்ள பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.