புதுவை மாநிலம், சுண்ணாம்பாற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
அரியாங்குப்பம் மணவெளி சுடலை வீதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி ஞானம் (81). இவருக்கு மகன்கள், மகள்கள் உள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை சுண்ணாம்பாறு பகுதிக்குச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் தேடிப் பார்த்தபோது, ஆற்றில் ஞானம்பாள் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தவளக்குப்பம் போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.