ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலத் துறை, இந்தியன் குழந்தைகள் நலத் துறை அகாதெமி ஆகியவை இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வுப் பேரணி மதகடிப்பட்டில் அண்மையில் நடைபெற்றது.
பேரணியை புதுச்சேரி எஸ்.பி. ரங்கநாதன் தொடக்கி வைத்தார். இதில் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் எம். தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி. சுகுமாறன், செயலர் கே. நாராயணசாமி, இயக்குநர் டி.ராஜகோவிந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பேரணியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் நலத் துறையின் முதுநிலைப் பிரிவு மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர், குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பங்கேற்றனர்.
இந்தப் பேரணி மதகடிப்பட்டின் முக்கிய சாலைகள் வழியே சென்று, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.