சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு சென்னை இந்தியன் வங்கி பொது மேலாளர் கே.சந்திர ரெட்டி தலைமை வகித்தார். புதுச்சேரி மண்டல மேலாளர் பி. வீரராகவன், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு விதமாக கடனுதவிகள் குறித்து விளக்கினார். துணைப் பொது மேலாளர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார்.
விழாவில் 388 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 16 கோடி அளவிலான கடனுதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத் தலைமை மேலாளர்கள், கிளை மேலாளர்கள், அலுவலர்கள், சுய உதவிக் குழு பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com